நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 23/06/2025 | Edited on 23/06/2025
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாந்த் என்பவர் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்த விசாரணையில் பிரதீப் என்பவர் உள்ளிட்ட சிலரிடம் இவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிரதீப், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாக சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீ காந்திடம் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மருத்துவ பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.