இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திருப்பி விடப்பட்ட 5 ஸ்ரீலங்கன் விமானங்கள்

Published

on

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திருப்பி விடப்பட்ட 5 ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது.

இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version