இலங்கை

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் ஆரம்பம்!

Published

on

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் ஆரம்பம்!

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் இன்று  கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

“சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று முதல் திகதி தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய இந்த நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின்  உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ்  மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version