இலங்கை
யாழில் 19 வயது இளைஞனை பலியெடுத்த லிப்ட் ; விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழில் 19 வயது இளைஞனை பலியெடுத்த லிப்ட் ; விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தின் போது நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் குறித்த ஹோட்டலில் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற மின் தூக்கியானது திறந்த வெளியான மின் தூக்கியாக காணப்படுவதுடன் அதனை இயக்கும் ஆழியும் (switch) கீழேயே காணப்பட்டதாகவும், குறித்த மின் தூக்கியினுள் இருப்பவரால் அதனை இயக்க முடியாது.
அந்தவகையில் குறித்த இளைஞன் அந்த மின் தூக்கியில் ஏறி தயார் நிலையில் இருப்பதற்கு முன்னர் கீழிருந்து ஒருவர் மின் தூக்கியை இயக்கியுள்ளார். இதன்போது குறித்த இளைஞனின் தலை இரும்பு கேடர் மீது மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.