சினிமா

ரஜினிகாந்துடன் அப்படி ஒரு ரோலில் நடித்த நடிகை.. படம் ரிலீஸ் நாளில் ஊரைவிட்டு வெளியேற்றம்

Published

on

ரஜினிகாந்துடன் அப்படி ஒரு ரோலில் நடித்த நடிகை.. படம் ரிலீஸ் நாளில் ஊரைவிட்டு வெளியேற்றம்

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, ரமேஷ் கண்ணா, ராதாரவி, லட்சுமி என பலரும் நடித்திருந்தனர்.ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் ரஜினிக்கு நிகராக செம மாஸ் வில்லியாக நடித்து அசத்தியிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு அடையாளமாகவே மாறிவிட்டது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்களில் நீலாம்பரியும் ஒன்றாகும்.இந்த நிலையில், பேட்டி ஒன்றில் படையப்பா படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்து ரம்யா கிருஷ்ணன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.”படையப்பா படத்தில் எனக்கு சாய்ஸ் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பேன். ஏனென்றால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பதற்கு யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். படத்தில் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு செய்யும்போதெல்லாம், படப்பிடிப்பில் இருந்தவர்கள் நீங்கள் கொஞ்ச நாட்கள் சென்னைக்கு வராமல் இருக்கள் என என்னிடம் சொன்னார்கள். அதேபோல் படத்தின் ரிலீஸின் பொது நான் சென்னையில் இல்லை” என கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version