உலகம்

கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளங்களின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Published

on

கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளங்களின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அணுசக்தித்தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத்தளங்களை நோக்கி ஆறு ஏவுகணைகளை வீசி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலை கட்டாரும் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

ஆறு ஏவுகணைகள் கட்டார் வான்பரப்பினுள் பிரவேசித்தன. எனினும், அவை அமெரிக்கத் தளங்களை அடைவதற்கு முன்பாக இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்கத் தளத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. ஈரானும் சேத விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடவில்லை.

ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்களின் வான்பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. இந்தத் தாக்குதல் முயற்சிக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version