இலங்கை

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இரு நிறுவனங்கள்

Published

on

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இரு நிறுவனங்கள்

இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இரு முக்கிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் இன்று  (24) காலை 5.00 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குவைத் நாட்டிலிருந்து இருந்து இயங்கும் கட்டார் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகிய இரண்டு விமான சேவைகளும் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கொழும்பு – கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

கட்டாருக்குள் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் அடுத்த, கட்டார் அரசாங்கம் அதன் வான் வெளியை மூடியது. இதனை அடுத்து விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கொழும்பு – கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையதிலிருந்து கட்டாரின் தலைநகர் டோஹா மற்றும் குவைத்தின் தலைநகர் குவைத் நகரம் ஆகியவற்றுக்கான விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன எனவும், இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version