இலங்கை

இஷாரா செவ்வந்தி தொடர்பில் அனைத்து தகவல்களும் கிடைத்துவிட்டன ; அரசாங்க தரப்பில் வௌியான தகவல்

Published

on

இஷாரா செவ்வந்தி தொடர்பில் அனைத்து தகவல்களும் கிடைத்துவிட்டன ; அரசாங்க தரப்பில் வௌியான தகவல்

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும்,  அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாகவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

நேற்று (23) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போதே இதனை தெரிவித்தார்.

Advertisement

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த கொலை தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதாக எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக பார்க்கும்போது, இந்த சந்தேக நபரிடம் இருந்த அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version