இலங்கை

சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்! விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி.

Published

on

சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்! விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி.

சட்டமா அதிபர் திணைக்களப் பணியாளர்கள் மீது சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று சட்டமா அதிபர் பரிந்தரணசிங்க அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மீதே சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்குவதை ஆதரித்தார் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர்மீது சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

Advertisement

அதேபோன்று, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பான வழக்கில், சிரேஷ்ட அதிகாரிக்குப் பதிலாக கனிஷ்ட அதிகாரியொருவரை சட்டமா அதிபர் திணைக்களம் பிரதிநிதித்துவப்படுத்தியது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பாகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version