இலங்கை

டெங்கு காய்ச்சலால் 15பேர் உயிரிழப்பு!

Published

on

டெங்கு காய்ச்சலால் 15பேர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Advertisement

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தற்போது வாரத்திற்கு சராசரியாக 1,300 டெங்கு நோயாளர்கள் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

Advertisement

இந்த திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 101 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version