இலங்கை
தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல்
தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல்
முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மாங்குளம் பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள், திருமுருக்கண்டி பகுதியில் உள்ள ஒரு இனிப்புக் கடையில், கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
அத்துடன் கேரள கஞ்சாவையும் மீட்டு மேலதிக விசாரணைக்காக மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.