இலங்கை

பாதசாரிகள் கடவையில் பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; சாரதி தப்பியோட்டம்

Published

on

பாதசாரிகள் கடவையில் பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; சாரதி தப்பியோட்டம்

நுவரெலியா – நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சாரதி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும், சிசிடிவி காணொளிப் பதிவுகளை சோதனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version