இலங்கை

புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற சம்பவம்; அச்சத்தில் சிதறி ஓடிய பக்தர்கள்!

Published

on

புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற சம்பவம்; அச்சத்தில் சிதறி ஓடிய பக்தர்கள்!

 வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 நேற்றையதினம் (23) ஆலய பொங்கல்  திருவிழாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு  நாகதம்பிரானை வழிபட வருகை தந்திருந்தனர்.

Advertisement

வவுனியா மக்கள் மட்டுமல்லாது வேறு பிரதேச மக்களும் புதூர் நாகதம்பிரானை வழிபட பெரும் தொகையாக வருகை தந்திருந்ததுடன்,  காவடிகள் எடுத்தும் தங்கள்  நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்கு  ஆலயத்திற்கு வருகை  தந்திருந்தனர்.

இந்நிலையில் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர்களின் தாக்குதலால் நாகதம்பிரானை தரிசிக்க வந்த பக்தர்கள் அச்சத்தில் சிதறி ஓடியிருந்தனர்.

Advertisement

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், ஆலய திருவிழாவில் இளைஞர்களின் மோசமான செயலுக்கு சமூக ஆர்வர்கள் விசனக்களை வெளியிட்டு வருவதுடன், பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.  

அதேவேளை தகராறில் ஈடுபட்டவர்கள் சகோதர மதத்தினை சார்ந்தவர்கள் எனவும் திட்டமிட்ட வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சமூக வலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.

இது மத நல்லிணக்கத்தை குழப்பி மக்களை மதம் பிடிக்க வைக்கும் ஒரு முயற்சியாகவும் கருதலாம் என்றும், எனவே ஆலய நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version