இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா… இல்லையா…; ஆராய்வதற்கு குழு!
புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா… இல்லையா…; ஆராய்வதற்கு குழு!
ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சையை 2029ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பரீட்சையை நடத்துவது மற்றும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் குறைந்த அழுத்தத்துடன் வினாத்தாள்களை உருவாக்குவது குறித்து பரீட்சைத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் ஆய்வுகளைக் கருத்திற்கொண்டு 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு பரீட்சையை நடத்துவது குறித்து ஒருமுடிவு எடுக்கப்படும். ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை திடீரென நிறுத்தப்படாது. பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.