இலங்கை
மத்திய கிழக்கில் மூடப்பட்ட வான்வெளிகள் திறப்பு!
மத்திய கிழக்கில் மூடப்பட்ட வான்வெளிகள் திறப்பு!
இஸ்ரேல் – ஈரான் போர் க்பதற்றத்தால் மத்திய கிழக்கில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கத்தார் வான்வெளி உட்பட மூடப்பட்டிருந்த மற்ற அனைத்து வான்வெளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (23) கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் ஈராக்கில் உள்ள ஒரு அமெரிக்கத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பல வான்வெளிகள் மூடப்பட்டன.
இதன் விளைவாக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன,
மேலும் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பறக்கும் 5 விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மஸ்கட், துபாய் மற்றும் ரியாத் விமான நிலையங்களில் தொடர்புடைய விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தனது வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
நாட்டில் பாதுகாப்பு நிலைமை இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியைத் திறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.