இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு!

Published

on

யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக செயலர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

Advertisement

முன்பதாக மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை,  மேலதிக மாவட்ட செயலர் ஸ்ரீமோகன் மாலை அணிவித்து வரவேற்றிருந்தார். அதைத்தொடர்ந்து  சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட செயலர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட செயலர் வெற்றிடம் இருந்துவந்த நிலையில் பதில் மாவட்ட செயலராக கடமையாற்றி வந்த பிரதீபன் சில தினங்களுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டிருந்தார். அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட பிரதீபனுக்கான நியமனக் கடிதம் கடந்த 20ஆம் திகதி அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version