இலங்கை

வேக கட்டுப்பாட்டை இழந்து கார் -லொறியுடன் மோதி விபத்து; இருவருக்கு நேர்ந்த கதி

Published

on

வேக கட்டுப்பாட்டை இழந்து கார் -லொறியுடன் மோதி விபத்து; இருவருக்கு நேர்ந்த கதி

 கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து பன்னல – குளியாபிட்டிய பிரதான வீதியில் போவத பகுதியில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.

Advertisement

பன்னலவில் இருந்து பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version