இலங்கை

எல்ல சுற்றுலாப் பகுதியில் பாரிய தீப்பரவல் ; கவனக்குறைவால் நேர்ந்த அனர்த்தம்

Published

on

எல்ல சுற்றுலாப் பகுதியில் பாரிய தீப்பரவல் ; கவனக்குறைவால் நேர்ந்த அனர்த்தம்

எல்ல சுற்றுலாப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

வன பாதுகாப்பு அதிகாரிகளால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தியத்தலாவ இராணுவ முகாமை சேர்ந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குப்பைகளுக்கு தீ வைக்க முயற்சித்த போது கவனக்குறைவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் ஏலவே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டு பாரியளவான வனப்பகுதி அழிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version