இலங்கை

கதிர்காம எசல பெரஹெரவில் பாதுகாப்பு கடமையில் குவிக்கப்பட்ட பொலிஸார்

Published

on

கதிர்காம எசல பெரஹெரவில் பாதுகாப்பு கடமையில் குவிக்கப்பட்ட பொலிஸார்

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெரவின் போது பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,050 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஐந்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் மூன்று பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் இதற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பானம பொலிஸ் பிரிவிலிருந்து யால சரணாலயம் வழியாக பெரஹெர நிகழ்வுக்கு கால்நடையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக முப்படை அதிகாரிகளின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த பெரஹெர நிகழ்வு நாளை (26) முதல் ஜூலை 10 வரை நடைபெறும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version