இலங்கை
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி ; இரு நபர்களின் முகம்சுழிக்க வைக்கும் செயல்
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி ; இரு நபர்களின் முகம்சுழிக்க வைக்கும் செயல்
மோட்டார் சைக்கிள் ஒன்றை இனந்தெரியாத இரண்டு நபர்கள் சூட்சமமான முறையில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தத் திருட்டுச் சம்பவம் கிரிபத்கொட மஹர சந்திக்கு அருகில் இன்று (25) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி பதிவுகளை வைத்து சந்தேகநபர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.