இலங்கை
செம்மணிப் புதைகுழி விவகாரம்; அகழ்வுப் பணிகளுக்கு விடுவிக்கப்பட்டது நிதி! நாளை அகழ்வு ஆரம்பம்
செம்மணிப் புதைகுழி விவகாரம்; அகழ்வுப் பணிகளுக்கு விடுவிக்கப்பட்டது நிதி! நாளை அகழ்வு ஆரம்பம்
யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்திமனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, அகழ்வுப் பணிகளுக்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ள விடயமும், திட்டமிட்டபடி ஜூன் மாதம் 26ஆம் திகதியன்று (நாளை) அகழ்வுகளை மேற் கொள்வதில் எந்தத் தடங்கலும் இல்லை என்றும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அண்மையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. ‘மனிதப்புதைகுழி’ என்ற அடையாளப்படுத்தலுக்கு அமைய இனி அகழ்வுப் பணி தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.