இலங்கை

திடீரென சுகயீனமுற்ற பாடசாலை மாணவர்கள்

Published

on

திடீரென சுகயீனமுற்ற பாடசாலை மாணவர்கள்

புத்தளம் – மாதம்பே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் உடலில் சிவப்பு நிற தழும்புகள் தோன்றுதல் மற்றும் தோல் அரிப்பு என்பன ஏற்பட்டுள்ளன.

இதனை அவதானித்த ஆசிரியர், சுகயீனமுற்ற மாணவர்களை உடனடியாக மாதம்பே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சுகயீனமுற்ற மாணவர்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version