இலங்கை
புதைகுழிகளுக்கு நீதிகோரி செம்மணியில் இன்று போர்!
புதைகுழிகளுக்கு நீதிகோரி செம்மணியில் இன்று போர்!
செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் அவதானிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதிகோரியும், இனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இன்று பெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது. ‘மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் “அணையாவிளக்கு’ என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தின் இறுதிநாளான இன்றையதினம் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த ஏராளமான அமைப்பினர், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் செயற்பாட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பங்கெடுப்புடன் இந்தக் கவனவீர்ப்பு நட வடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக பல வர்த்தக அமைப்புகள் இன்று கடையடைப்புத் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளன. அத்துடன் வெளிமாவட்ட மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு வசதியாக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.