இலங்கை
போலி சமூக ஊடகக் கணக்கு குறித்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு!
போலி சமூக ஊடகக் கணக்கு குறித்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு!
தங்களது பெயரில் இயங்கும் போலி சமூக ஊடகக் கணக்கு குறித்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், தெஹிவளை விலங்கினச்சாலை, அதிகாரபூர்வ முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
பயனர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்காகத் தேசிய விலங்கினச்சாலையின் பெயரைப் பயன்படுத்தி, போலியான பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாக, இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சீட்டிழுப்பை நடத்துவதாகவும், வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்குவதாகவும் அந்த போலிக் கணக்கில் பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கணக்குக்கும் தமக்கும் எந்த தொடர்புகளும் இல்லையென்று, தேசிய விலங்கினச்சாலை நிர்வாகம் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை