இலங்கை

மட்டக்களப்பில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் மீது பெணகள் தாக்குதல்

Published

on

மட்டக்களப்பில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் மீது பெணகள் தாக்குதல்

  மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தி பொல்லுகளால் (25) தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை கைது செய்துள்ள நிலையில் 3 பேர் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார்.

திருடன் அவனது வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று (25) பிற்பகல் கைது செய்வதற்காக இரு பொலிசார் சிவில் உடையில் அங்கு சென்று அவனை கைது செய்ய முற்பட்டனர்.

Advertisement

இதன் போது அங்கு பொலிசார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version