இலங்கை

மன்னார் நடுக்குடாவில் பீடி இலைகள் மீட்பு!

Published

on

மன்னார் நடுக்குடாவில் பீடி இலைகள் மீட்பு!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடாக் கடற்கரைப் பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூடைகள் மற்றும் ஒரு தொகுதி பீடிக்கட்டுகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்ட நிலையில் 45 மூடைகளில் பொதி செய்யப்பட்ட ஆயிரத்து 360 கிலோ பீடி இலைகள் மற்றும் 29 ஆயிரத்து 120 பீடிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கடற்படைக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் குறித்த பொருள்கள் மீட்கப்பட்டநிலையில் கடற்படையினர் மன்னார் மதுவரிநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மன்னார் மது வரி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version