பொழுதுபோக்கு

மெட்டி ஒலி சரோ ஞாபகம் இருக்கா? விஜய் படத்தில் அஜித்துக்கு ஜோடி: இவரது அண்ணன் ரஜினி படத்தில் கொடூர வில்லன்!

Published

on

மெட்டி ஒலி சரோ ஞாபகம் இருக்கா? விஜய் படத்தில் அஜித்துக்கு ஜோடி: இவரது அண்ணன் ரஜினி படத்தில் கொடூர வில்லன்!

சின்னத்திரையின் மெட்டி ஒலி சீரியலில் சரோ கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் தான் நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், இவரது அண்ணன், ரஜினிகாந்தின் ஃபேமஸ் பட வில்லன் என்று பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த பல படங்கள் மற்றும் சீரியல்கள் உள்ளன. இந்த சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை போல் அதில் நடித்துள்ள நடிகர் நடிகைளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்றும், இந்த சீரியல் நட்சத்திரங்களை ரசிகர்கள் மறக்கவில்லை என்பதற்கு பெரிய உதாரணம், அவ்வப்போது அவர்கள் குறித்து வெளியாகி வரும் பதிவுகளும், தகவல்களும் தான்.அந்த வகையில் சன்டிவியின் மெட்டி ஒலி சீரியல் 90-ஸ் குழந்தைகள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை பெற்ற சீரியல். இந்த சீரியலுக்கான ஃபேன் பேஸ் இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த சீரியலில் சரோ என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி சாஸ்திரி. அம்மா பேச்சை கேட்கும் கணவன், தரக்குறைவாக பேசும் மாமியார் இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக்கொள்ளும் மருமகள் சரோ கேரக்டரில் காயத்ரி சாஸ்திரி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர், தனது அம்மாவின் வழியில் பரநாட்டியம் கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்துள்ளார். அந்த வகையில், விஜய் அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான ராஜாவின் பார்வையிலே படத்தில், அஜித்தின் காதலியாக நடித்திருந்தார். 1994-ம் ஆண்டு அரவிந்த் சாமி, ரேவதி நடிப்பில் வெளியான பாசமலர்கள் படம் தான் காயத்ரி அறிமுகமான முதல் படம்.பாசமலர்கள் படத்தில் அஜித் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு, 1995-ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில், அஜித்தின் காதலியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்த காயத்ரி, சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். மெட்டி ஒலி சீரியலில் மருமகளாக நடித்திருந்த இவர், தற்போது பல சீரியல்களில், நடிகைகளுக்கு மாமியார் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது அண்ணன், சஞ்சய் பார்கவ் ஒரு நடிகர் தான்.பாசமலர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்ற இவர், தன்னுடன் காயத்ரியையும் அழைத்து செல்ல, சஞ்சய்க்கு வாய்ப்பு இல்லாமல், காய்தரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு நடிகராக மாறிய சஞ்சய் பார்கவ், ரஜினிகாந்த் கதை எழுதி நடித்த திரைப்படமான வள்ளி படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் பிரியாராமன் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version