இலங்கை

இ.போ.ச பஸ் நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல்

Published

on

இ.போ.ச பஸ் நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல்

 இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்றின் நடத்துனரை தாக்கிய தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் நடத்துனரும் அம்பாந்தோட்டை பொலிஸாரால் நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மாத்தறை – நுவரெலியா தனியார் பஸ்ஸின் சாரதியும் நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இ. போ. ச பஸ் நடத்துனர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெலியத்தவிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் நடத்துனரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

நீண்ட தூர பஸ் சேவைகளுக்கான நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version