இலங்கை

உடன் அமுலுக்கு வரும் வகையில் 32 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Published

on

உடன் அமுலுக்கு வரும் வகையில் 32 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 32 பொலிஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 9 பிரதிபொலிஸ்மா அதிபர்களும், 16 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றன.

Advertisement

மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு காரியாலயத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரான நிஹால் தல்துவ மொனராகலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைத் திணைக்களத்தில் கடமையாற்றும் 16 அதிகாரிகள் ஜூலை மாதம் 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, 2 விசேட சிறைச்சாலை அத்தியட்சகர்கள் , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் 13 சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் இவ்வாறு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version