இலங்கை
ஐரோப்பாவிற்கு பயணம்; யாழ் இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது
ஐரோப்பாவிற்கு பயணம்; யாழ் இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது
இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்கள் இருவரும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (25) அன்று இரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையகள் என கூறப்படுகின்றது.
அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே அதிகாரிகள் சோதனையில் இருவரும் பிடிபட்டுள்ளனர்.