இலங்கை

ஐரோப்பாவிற்கு பயணம்; யாழ் இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது

Published

on

ஐரோப்பாவிற்கு பயணம்; யாழ் இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது

இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் இருவரும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (25) அன்று இரவு கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையகள் என கூறப்படுகின்றது.

அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே அதிகாரிகள் சோதனையில் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version