இலங்கை
கடற்றொழில் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வுகளை எட்டுவோம்- கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!
கடற்றொழில் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வுகளை எட்டுவோம்- கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் சார்ந்து முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை நிச்சயமாக எட்டுவோம் என்று கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பிரதேச ரீதியான இணக்கப்பாடு எமக்குத்தேவை. பிரதேசப் பிரச்சினையைத் தீர்க்க உளூராட்சி நிறுவனங்களை ஒழுங்கமைக்க வேண்டியிருப்பதால் நாட்டில் ஒன்பதாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமாக இதனை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீனவர் பிரச்சினையை விரைவாகத் தீர்க்கச் சொல்லியுள்ளார். உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விவசாயம், பெருந்தோட்டம் உட்பட கடற்றொழிலையும் வளர்க்க வேண்டும். யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதத்தினர் கடற்றொழில் மூலம் சீவிக்கின்றார்கள். எனவே கடற்றொழில் சார்ந்து முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் நிச்சயமாகத் தருவோம் – என்றார்.