இலங்கை
செம்மணிப் புதைகுழி; அகழ்வுப் பணி இன்று!
செம்மணிப் புதைகுழி; அகழ்வுப் பணி இன்று!
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன. செம்மணிப் புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வுக்கான பாதீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி, அதற்குரிய நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே, இன்றையதினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் தொடரவுள்ளன. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அகழ்வுப் பணிகளைக் கண்காணித்துவருகின்றார். காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.