இலங்கை

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் ஐ.நா குழுவுடன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கலந்துரையாடல்

Published

on

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் ஐ.நா குழுவுடன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கலந்துரையாடல்

இன்று ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் வோல்கர் டர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

சந்திப்பில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் இனவெறி இல்லாமல் ஆட்சி செய்வதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

Advertisement

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தம், மனித உரிமைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆகியவற்றில் அவர்களின் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு அரசாங்கமாக, இலங்கையில் இனவெறி அல்லது அடக்குமுறை மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழ அனுமதிக்காது என்றும், இதுவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். 

குறிப்பாக, இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகளிடம் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை மற்றும் இலங்கை தேசமாக செயல்பட எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினோம் என்று டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version