இலங்கை
யாழ் சென்ற எரிபொருள் தாங்கி கிளிநொச்சியில் விபத்து; ஓடிச்சென்று பெரல்களில் நிரப்பிய மக்கள்
யாழ் சென்ற எரிபொருள் தாங்கி கிளிநொச்சியில் விபத்து; ஓடிச்சென்று பெரல்களில் நிரப்பிய மக்கள்
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று தடண்புரண்டது.
முத்துராஜவெலவிலிருந்து யாழ்ப்பாண்ம் காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.00 மணிக்கு தடம்புரண்டது.
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. டீசல் ஏற்றி வந்த எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானதால் பெருமளவான டீசல் வெளியேறியது.
அதையடுத்து வீதியால் சென்ற மக்கள் எரிபொருளை கேன்களில் பிடித்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை ஈரான் – இஸ்ரேல் போரினால் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை வழக்கத்திற்கு அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.