இலங்கை
359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி!
359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 359 கடலட்டைப் பண்ணைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டக் கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே 499 கடலட்டைப் பண்ணைகள் உள்ளன. இதேவேளை 359 கடலட்டைப் பண்ணைகள் புதுப்பண்ணைகளாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 5 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.