இலங்கை
உயர்தரப் பரீட்சை நவம்பரில் நடாத்த திட்டம்!
உயர்தரப் பரீட்சை நவம்பரில் நடாத்த திட்டம்!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 21ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகாகுமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk அல்லது http://www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாகவும் விண்ணப்பிக்க முடியும்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கமுடியாது எனவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.