இலங்கை
உல்லாச காட்சிகளை கசியவிட்ட தம்பதி; பொலிஸார் அதிரடி
உல்லாச காட்சிகளை கசியவிட்ட தம்பதி; பொலிஸார் அதிரடி
இந்தியாவின் ஹைதராபாத்தில், முகமூடி அணிந்து பாலியல் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நிதி நெருக்கடியில் இருந்தமையினால் தாம் இவ்வாறான செயலில் ஈடுபட்டதாக குறித்த தம்பதியினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களுடைய இரு பெண் பிள்ளைகளுக்குமான பாடசாலை கட்டணங்களை செலுத்துவதற்காகவும் இதுபோன்ற செயற்பாடுகளில் குறித்த தம்பதியினர் ஈடுபட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அவர்கள் ஒரு நேரடி காணொளியை இந்திய மதிப்பில் 2,000 ரூபாய்க்கும், பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியை இந்திய மதிப்பில் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.