சினிமா
சரிகமப சீனியர் 5!! வித்யாசாகரையே கண்ணீர்விட்டு அழ வைத்த போட்டியாளர் அருண்..
சரிகமப சீனியர் 5!! வித்யாசாகரையே கண்ணீர்விட்டு அழ வைத்த போட்டியாளர் அருண்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப.இந்நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 சமீபத்தில் ஆரம்பமாகியுள்ளது. பல போட்டியாளர்களின் வாழ்க்கை சம்பவம் பலரையும் உருகவைத்தது. இதனை தொடர்ந்து, இந்த வாரம் Melody King Vidyasagar Round நடந்துள்ளது.இசையமைப்பாளர் வித்யாசாகரும் இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.நிகழ்ச்சியில் பாடிய போட்டியாளர் அருண்,புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே என்ற பாடலை பாடியிருக்கிறார்.சிறப்பாக பாடிய அருணால், வித்யாசாகர் கண்ணீர் விட்டு அழுதுள்ள பிரமோ வீடியோவை ஜீ தமிழ் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அருணை வாழ்த்து வருகிறார்கள்.