இந்தியா

தனி மாநில அந்தஸ்து: புதுச்சேரி சுயேட்சை எம்.எல்.ஏ, சமூக அமைப்புகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

Published

on

தனி மாநில அந்தஸ்து: புதுச்சேரி சுயேட்சை எம்.எல்.ஏ, சமூக அமைப்புகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமேன நெடுங்காலமாக மத்திய அரசை புதுச்சேரி அரசு வலியுறுத்தி வருகிறது. அண்மையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் 15 தீர்மானங்களை இயற்றியது. ஆனால், மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று கைவிரித்தது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 16-வது முறையாக தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இதேபோல், புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் 22-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்துக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல், இப்போராட்டத்தில் புதுச்சேரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் கலந்துகொண்டுள்ளார். காலை 10 மணி அளவில் போராட்டம் டெல்லியின் ஜந்தர்பந்தர் பகுதியில் தொடங்கிய நிலையில், பெகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர்யிழந்தவர்களுக்கும், குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பதாகைகள் ஏந்தி புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி, புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டன. செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version