இலங்கை

தொழிலுக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

Published

on

தொழிலுக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

வீட்டு பணியாளர்களாக அன்றி, வெளிநாடுகளுக்கு செல்வோர், அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

13 நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர், எதிர்வரும் முதலாம் திகதி முதல், இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Advertisement

அதற்கமைய, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலைத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களின் தொழில் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version