சினிமா

பாக்கியாவை போட்டி போட வைக்கும் இனியா..! பித்துப் பிடித்தது போல அலைந்து திரியும் கோபி…..

Published

on

பாக்கியாவை போட்டி போட வைக்கும் இனியா..! பித்துப் பிடித்தது போல அலைந்து திரியும் கோபி…..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா கோபியைப் பாத்து சுதாகர் என்கிட்ட எல்லாப் பிரச்சனையையும் சரி செய்திரலாம் என்று சொல்லுறார். அதனால, என்னைப் பற்றி எதையுமே ஜோசிக்காதீங்க என்கிறார். அதுக்கு கோபி இனியா எப்புடி உன்னைப் பற்றி ஜோசிக்காமல் இருக்கிறது என்று கேட்கிறார். அதுக்கு இனியா கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் என்ன நடக்குதுனு என்கிறார்.இதனை அடுத்து இனியா நீங்க அம்மாவோட ஆட்களை மதிக்காத மாதிரி தான் இப்ப நிதீஷும் செய்யுறார் என்று சொல்லுறார். பின் இனியா பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்குப் போய் நிற்கிறார். அங்க போய் கோபி தான் இங்க கூட்டிட்டு வந்தவர் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா நேற்றும் அப்பாவோட தான் வெளியில போனீ இண்டைக்கும் அவரோட வந்தனான் என்று சொல்லுற ஏதும் பிரச்சனையா என்று கேட்கிறார்.அதுக்கு இனியா நான் டாடி கூட time spent பண்ணுறது உனக்கு பொறாமையா இருக்கா என்று கேட்கிறார். அதனை அடுத்து இனியா ரெஸ்டாரெண்டை develop பண்ணுறதுக்கு வேற ஒரு ரெஸ்டாரெண்டில நடக்கிற போட்டியில் பங்கேற்க சொல்லுறார். பின் பாக்கியாவ இனியா அந்த ரெஸ்டாரெண்டுக்கு கூட்டிக்கொண்டு போறார். அங்க பாக்கியாவப் பார்த்தவுடனே இவங்களா போட்டியில கலந்து கொள்ளப்போறாங்க என்ற மாதிரி பார்க்கினம்.இதனை அடுத்து ஓனர் அந்த போட்டியை experience இருக்கிற ஆட்களால மட்டும் தான் செய்யமுடியும் என்று சொல்லுறார். மேலும் வீட்டில சமைக்கிறதை வச்சு இந்த போட்டியில கலந்து கொள்ளமுடியாது என்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த ஓனர் உங்களுக்கு கொஞ்ச நாள் கழித்து கால் பண்ணுறேன் என்று சொல்லுறார். அதுக்கு இனியா பாக்கியாவப் பாத்து எல்லாம் நல்ல படியா நடக்கும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version