சினிமா
போதைப் பொருள் பிரச்சனையில் ஸ்ரீகாந்த்.. ஆனால் மகனுக்காக செய்ததை பாருங்க
போதைப் பொருள் பிரச்சனையில் ஸ்ரீகாந்த்.. ஆனால் மகனுக்காக செய்ததை பாருங்க
ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.சாக்லேட் பாய் என ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2012ஆம் ஆண்டு தளபதி விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் ஹிட்டானது.இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நிறைய அரசியல் பிரமுகர்கள் சிக்க இப்போது நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியுள்ளார். இதனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஸ்ரீகாந்த் தனது மகனை பார்த்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தில் பிரச்சனை என கூறி ஜாமின் கேட்டிருந்தார். தனது மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளாராம் ஸ்ரீகாந்த்.அவரின் மகன் ஆஹில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராம். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை அள்ளியிருக்கிறார்.ஸ்ரீகாந்த் விளையாட்டு போட்டிகளில் தனது மகன் பங்கேற்றால் முதல் ஆளாக சென்றுவிடுவாராம்.மகனுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்த ஸ்ரீகாந்த் இப்போது இப்படியொரு பிரச்சனையில் சிக்கியிருப்பது அவரது குடும்பத்தினருக்கு கடும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.