சினிமா

மூன்றெழுத்து நடிகரை மடக்க கிடைத்த கொக்கைன் வழக்கு!! நடுங்கிப்போன கோலிவிட் சினிமா…

Published

on

மூன்றெழுத்து நடிகரை மடக்க கிடைத்த கொக்கைன் வழக்கு!! நடுங்கிப்போன கோலிவிட் சினிமா…

தமிழ் சினிமாவை தற்போது மொத்தமாக பயத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் என்றால் பிரபல நடிகர்கள் கொக்கைன் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டது தான். தீவிர விசாரணையில் இறங்கியிருக்கும் போலிசார், இதுதொடர்பில் இருப்பவர்களை வலைப்போட்டு விசாரணையை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பான பேச்சு பரவலாக பேசப்பட, சில பெரிய நடிகர்களின் பெயர்களும் அடிபடுகிறதாம். விசாரணையின் போது காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளதாம்.குறிப்பாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் என பலரது பெயர்கள் இதில் அடிபடுகிறதாம். உரிய ஆவணங்களை சேகரித்தப்பின்பே காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்களாம்.இந்நிலையில் இந்த வழக்கு இவ்வளவு தீவிரப்படுத்த இன்னொரு காரணமும் இருக்கிறதாம். அதாவது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நடிகரின் பெயரும், அவருக்கு நெருங்கியவர்களின் பெயரும் இந்த வழக்கில் அடிபட்டுள்ளதாம். ஆதாரங்களை திரட்டினால் அந்த நடிகர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருக்கு நெருக்கமான நடிகை ஒருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல் சர்ச்சை நடிகர் ஒருவருக்கும் இந்த போதைப்பொருள் விஷயத்தில் தொடர்பு இருக்கிறது என கூறப்படுகிறது. நன்றாக இருந்த நடிகர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மொத்தமாக, அவரின் நடவடிக்கைகள் மாறியதற்கான பின்னணியிலும் இந்த போதைப்பொருள் புழக்கத்திற்கான காரணமாக இருக்கும் என்று சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். இதுகுறித்து போலிசார் தீவிர விசாரணையை முடித்து அறிக்கை வெளியிட்டால் தான் யார் யார் மாட்டுவார்கள் என்ற தகவல் கிடைக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version