இலங்கை
வடக்கில் 5,941 ஏக்கர் காணிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!
வடக்கில் 5,941 ஏக்கர் காணிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!
வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளைய (28) காலக்கெடு முடிவடையும் இறுதி தறுவாயில் இந்த உத்தரவு, எம்.ஏ. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கையடுத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் பிறப்பித்துள்ளது.