இலங்கை

வளர்ப்பு மீன்களைப் பிடிக்க முயன்றபோது கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Published

on

Loading

வளர்ப்பு மீன்களைப் பிடிக்க முயன்றபோது கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

அச்சுவேலி – தோப்பு பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவனொருவன் நேற்று உயிரிழந்துள்ளான். பிரதீபன் தஸ்வின் (வயது-10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். அந்தச் சிறுவன் தனது பேரனுடன் தோட்டத்துக்குச் சென்றுள்ளான் பேரன் தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தபோது, அந்தச் சிறுவன் கிணற்றுக்குள் இருந்த வளர்ப்பு மீன்களைப் பிடிக்க முயற்சி செய்தபோதே தவறி வீழ்ந்துள்ளான். மீன்களைப் பிடிப்பதற்காக வாளியைப் போட்டபோது வாளியின் கயிறு சிறுவனின் காலில் சிக்குண்டு அவர் கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version