இலங்கை

கனடாவிலிருந்து பொதியில் வந்த ஒலிப்பெருக்கி ; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published

on

கனடாவிலிருந்து பொதியில் வந்த ஒலிப்பெருக்கி ; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

கனடாவிலிருந்து கொழும்புக்கு கூரியர் சேவை வழியாக வந்த உரிமை கோரப்படாத ஒலிப்பெருக்கி (ஸ்பீக்கர்) ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டது.

Advertisement

குறித்த ஒலிப்பெருக்கியினுள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 போதைப்பொருள் பக்கற்றுகளில் 4 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version