இலங்கை
கொழும்பில் வாடகைக்கு தங்கியிருந்த இளம் பெண் கொலை; பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பில் வாடகைக்கு தங்கியிருந்த இளம் பெண் கொலை; பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலென்னவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணொருவர் நேற்று (27) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.