இலங்கை

நண்பனை கொலை செய்ய உதவிய நண்பர்கள் குழு ; மடக்கி பிடித்த பொலிஸார்

Published

on

நண்பனை கொலை செய்ய உதவிய நண்பர்கள் குழு ; மடக்கி பிடித்த பொலிஸார்

அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Advertisement

அனுராதபுரம், திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.

சம்பவத்தில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அந்த வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பிரிவு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் நண்பர்கள் என்றும், போதைப்பொருள் தொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனுராதபுரத்தின் சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 29 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version