இலங்கை

கோயில் திருவிழாவில் நேர்ந்த அசம்பாவிதம் ;மூவர் பலி, பலர் படுகாயம்

Published

on

கோயில் திருவிழாவில் நேர்ந்த அசம்பாவிதம் ;மூவர் பலி, பலர் படுகாயம்

இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வருடாந்திர விழாவின் மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version