சினிமா

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்.. சுசித்ராவே சொல்லி இருக்காங்க!! சீமான் சொன்ன பதில்..

Published

on

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்.. சுசித்ராவே சொல்லி இருக்காங்க!! சீமான் சொன்ன பதில்..

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீகாந்த். வெற்றிப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பின் பெரியளவில் பேசப்படாத நடிகராக திகழ்ந்தார்.சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் பற்றிய பேச்சுக்கள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதுகுறித்து பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களிடன் செய்தியாளர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவை பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு சீமான், நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும் கிருஷ்ணாவும் அப்பாவிகள். அவர்களை தவிர வேறு யாரும் போதைப்பொருட்களை பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது.சினிமா வட்டாரத்தில் நடக்கும் கொக்கைன் விருந்துகள் குறித்து பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version